விமானத்துக்குள் புகுந்த ஆந்தை : மும்பையில் பரபரப்பு

மும்பை விமான நிலையத்தில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 777 ரக விமானம் நிறுத்தப்பட்டு இருந்தது.
விமானத்துக்குள் புகுந்த ஆந்தை : மும்பையில் பரபரப்பு
Published on

மும்பை,

விமானத்தை சுத்தம் செய்ய நேற்று முன்தினம் காலை விமான நிறுவன ஊழியர்கள் சென்றனர். அப்போது விமானத்தில், விமானி அறையில் ஆந்தை ஒன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் அதை பத்திரமாக வெளியே கொண்டு விட்டனர். மேலும் இதுகுறித்து விமான நிறுவனத்திற்கும் தகவல் கொடுத்தனர். விமானத்தின் விமானி அறைக்குள் ஆந்தை புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com