ஈரோடு மாவட்டத்தில் 6 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது

ஈரோடு மாவட்டத்தில் 6 மையங்களில் நேற்று தொடங்கிய பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை கலெக்டர் சி.கதிரவன் பார்வையிட்டார்.
ஈரோடு மாவட்டத்தில் 6 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது
Published on

ஈரோடு,

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி நிறைவடைந்தது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் விடைத்தாள் திருத்தும் பணி தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சென்னை தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி, ஈரோடு கல்வி மாவட்டத்தில் முதன்மை மையமாக ஈரோடு இந்து கல்வி நிலையத்திலும், துணை மையங்களாக எஸ்.வி.என். மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடம் மற்றும் வேளாளர் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடத்திலும், கோபி கல்வி மாவட்டத்தில் முதன்மை மையமாக சாரதா மேல்நிலை பள்ளிக்கூடத்திலும், துணை மையங்களான சாரதா மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடம் மற்றும் பழனியம்மாள் மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்திலும் என மொத்தம் 6 மையங்களில் நேற்று தொடங்கியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com