அரசு சார்பில் உதவித்தொகை வழங்கக்கோரி தனியார் பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

கோரோனா காலத்தில் தமிழக அரசு உதவித்தொகை வழங்கக்கோரி தனியார் பள்ளி ஆசிரியர், ஊழியர்கள் திருப்பூர் மாவட்டம் முழுவதும் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் 15 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
அரசு சார்பில் உதவித்தொகை வழங்கக்கோரி தனியார் பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
Published on

அனுப்பர்பாளையம்,

கொரோனா ஊரங்கால் பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை.மேலும் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்றும், கல்வி கட்டணம் வசூலிப்பதில் பல்வேறு நிபந்தனைகளையும், உத்தரவையும் அரசு பிறப்பித்துள்ளது. இதனால் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஒருசில பள்ளிகளில் கடந்த மாதம் வரை முழு சம்பளமும், சில பள்ளிகளில் பாதி அளவு சம்பளமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேசன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கம் சார்பில் உண்ணாவிரதம் திருப்பூர் மாவட்டம் முழுவதும் நேற்று அந்தந்த பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com