தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் சாய ஆலைகளுக்கான சல்ப்யூரிக் ஆசிட் கிடைப்பதில் சிக்கல்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் சாய ஆலைகளுக்கான சல்ப்யூரிக் ஆசிட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே போதுமான அளவு சல்ப்யூரிக் ஆசிட் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாய ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் சாய ஆலைகளுக்கான சல்ப்யூரிக் ஆசிட் கிடைப்பதில் சிக்கல்
Published on

திருப்பூர்,

திருப்பூர் பின்னலாடை வர்த்தகத்தில் சாய ஆலைகள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இந்த சாய ஆலைகளில் துணிகளுக்கு சாயமேறும் பணியில் பல்வேறு விதமான ரசாயனங்கள், நிறமிகள் பயன்படுத்தப்படுகின்றன. முதல் நிலை சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பில் சாயக்கழிவுநீரின் காரத்தன்மை சீராக்கும் பணியில் இந்த ஆசிட் பயன்படுகிறது.

மேலும், இதனை கட்டுக்குள் கொண்டுவர சல்ப்யூரிக் ஆசிட் பயன்படுத்தப்படுகிறது. அதுபோல் சாய ஆலைகளிலும் சல்ப்யூரிக் ஆசிட் முக்கிய மூலபொருளாக இருந்து வருகிறது. திருப்பூரில் உள்ள 18 பொது சுத்திகரிப்பு மையங்கள், தனியார் சுத்திகரிப்பு மையங்கள், சாய ஆலைகள் உள்ளிட்டவைகளுக்கு மாதம் தோறும் 1,100 டன் அளவு சல்ப்யூரிக் ஆசிட் தேவைப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com