ஈரோடு தனியார் நிதி நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகை; அதிகாரிகள் சீல் வைத்தனர்

கடன் தொகையை அபராதத்துடன் வசூலித்ததாக ஈரோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அந்த நிறுவனத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஈரோடு தனியார் நிதி நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகை; அதிகாரிகள் சீல் வைத்தனர்
Published on

ஈரோடு,

ஈரோடு மேட்டூர்ரோட்டில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிதி நிறுவனத்தின் மூலம் பொதுமக்கள் பலர் கடன் பெற்று, செல்போன், பிரிட்ஜ், கணினிகள் உள்பட பல்வேறு பொருட்களை வாங்கியுள்ளார்கள். மேலும், தனிநபர் கடனும் பலர் பெற்றிருக்கிறார்கள்.

இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் 6 மாதங்களுக்கு கடன் தவணை தொகையை செலுத்த வேண்டியதில்லை என்று ரிசர்வ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் அரசின் உத்தரவையும் மீறி கடன் தவணை தொகையை செலுத்தாதவர்களுக்கு அபராதத்துடன் கூடிய கடன் தவணை வசூலித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடன் வாங்கியிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com