வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.6 கோடி நிலம் மீட்பு

சென்னை வில்லிவாக்கத்தில் பிரசித்திபெற்ற அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. வில்லிவாக்கம் எம்.டி.எச். சாலையில் இந்த கோவிலுக்கு சொந்தமான 6 கடைகள் வாடகைக்கு விடப்பட்டு உள்ளது. ஆனால் வாடகைதாரர்கள் பல வருடங்களாக கோவிலுக்கு வாடகை பாக்கியை செலுத்தவில்லை.
வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.6 கோடி நிலம் மீட்பு
Published on

இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கோர்ட்டில் கோவிலுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதையடுத்து வாடகை தராத 6 கடைகளுக்கும் அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. இதன் மூலம் அந்த கடைகள் அமைந்துள்ள கோவிலுக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com