

ஊத்துக்கோட்டை,
ஆற்றில் தண்ணீர் தேங்குவதன் காரணமாக அருகே உள்ள கிணறுகளில் தண்ணீர் கிடைப்பதால் விவசாயிகள் நெல், வேர்க்கடலை, கரும்பு போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மணல் குவாரி அமைக்க முடிவு செய்து ஆரம்பகட்ட பணிகளை தொடங்கி உள்ளது. மணல் குவாரி தொடங்கினால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைய வாய்ப்பு உள்ளது. மணல் குவாரி அமைக்க கூடாது என்று கூறி நேற்று ஊத்துக்கோட்டை கிராம நிர்வாக அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.