சகோதரிகள் மர்மச்சாவு: வி‌‌ஷம் கலந்த உணவு சாப்பிட்டதால் இறந்தனர்

சகோதரிகள் வி‌‌ஷம் கலந்த உணவு சாப்பிட்டதால் தான் இறந்தனர் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.
சகோதரிகள் மர்மச்சாவு: வி‌‌ஷம் கலந்த உணவு சாப்பிட்டதால் இறந்தனர்
Published on

நாட்டறம்பள்ளி,

நாட்டறம்பள்ளி அருகே உள்ள புதுப்பேட்டை அம்மணாங்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 34), கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரியா. இவர்களது மகள்கள் ஜெயஸ்ரீ (5), தனுஸ்ரீ (3). பொங்கலுக்கு முந்தையை நாள் சுரேஷ் தனது குடும்பத்துடன் புதுப்பேட்டையில் உள்ள பூங்காவிற்கு சென்றார்.

அங்கு மகள்களுக்கு தின்பண்டங்களை வாங்கி கொடுத்தார். அன்று இரவு 2 மகள்களுக்கும் வயிற்றுவலி ஏற்பட்டது. மறுநாள் பொங்கல் தினத்தன்று வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஜெயஸ்ரீ, தனுஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில், விஷம் கலந்த உணவை சிறுமிகள் சாப்பிட்டிருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com