ஆற்றில் மணல் எடுக்க அனுமதி வழங்கக்கோரி துணை கலெக்டர் அலுவலகத்தை மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகை

சங்கராபரணி மற்றும் தென்பெண்ணை ஆறுகளில் மணல் எடுக்க அனுமதிக்கக்கோரி வில்லியனூரில் உள்ள துணை கலெக்டர் அலுவலகத்தை மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
ஆற்றில் மணல் எடுக்க அனுமதி வழங்கக்கோரி துணை கலெக்டர் அலுவலகத்தை மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகை
Published on

வில்லியனூர்,

வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில் மணல் அள்ள புதுச்சேரி அரசு தடை விதித்து உள்ளது. இதை மீறி மணல் அள்ளுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, மணல் அள்ள பயன்படுத்திய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அதன் காரணமாக மாட்டு வண்டி தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வில்லியனூர் துணை கலெக்டர் அலுவலகத்தை, மாட்டு வண்டி தொழிலாளர்கள் நேற்று காலை மாட்டு வண்டிகளுடன் வந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் ஏ.ஐ. டி.யு.சி. மாநில செயலாளர் சேது செல்வம், மாநில தலைவர் அர்ஜுனன், பொருளாளர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com