

நேற்று காலை தான் கடையை திறக்க இருந்ததாக தெரிகிறது. ஆனால் திடீரென கிஷோர், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்துவந்த தாம்பரம் போலீசார், கிஷோர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் கிஷோர், எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில் அவர், தான் கடையை திறப்பதற்காக வைத்து இருந்த ரூ.1 லட்சத்தை ஆன்லைன் விளையாட்டில் இழந்து விட்டதாக எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தார்.
இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரித்து வருகின்றனர்.