கொரோனா நிவாரண பணிக்கு ரூ.1,000 நன்கொடையளித்த சிறுவன்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தாராளமாக நிதியுதவி அளிக்குமாறு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்.
கொரோனா நிவாரண பணிக்கு ரூ.1,000 நன்கொடையளித்த சிறுவன்
Published on

இதனை அறிந்த காஞ்சீபுரம் ரங்கசாமி குளம் பகுதி நாகலூத்து தெருவில் வசிக்கும் கார்த்திக் என்பவரது மகன் ரோஹித் (வயது 6) தான் சேமித்து வைத்திருந்த ரூ.1,000-த்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இணையதளத்தின் வாயிலாக செலுத்தினான். 1-ம் வகுப்பு படித்து வரும் சிறுவன் ரோஹித்தின் மனித நேயத்தை சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள் பலரும் பாராட்டினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com