அரசு அதிகாரி பல கோடி ரூபாய்க்கு சொத்து குவித்தது அம்பலம்

ஊழல் தடுப்பு படை சோதனையில் அரசு அதிகாரி பல கோடி ரூபாய்க்கு சொத்து குவித்தது அம்பலம் ஆகி உள்ளது.
அரசு அதிகாரி பல கோடி ரூபாய்க்கு சொத்து குவித்தது அம்பலம்
Published on

பெங்களூரு,

பெங்களூருவில் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார பிரிவின் துணை இயக்குனராக பணியாற்றி வருபவர் நவநீத் மோகன். இவர் தனது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து நேற்று முன்தினம் ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் அவருடைய 2 வீடுகள், அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடத்தினர்.

சோதனையின்போது வீடுகளில் இருந்த சொத்து பத்திரங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் உள்பட முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி பரிசீலனை செய்தனர். தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் ஆகியவை மதிப்பீடு செய்யப்பட்டன. முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி தொடர்ந்து பரிசீலனை செய்து வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com