

கடமலைக்குண்டு,
கடமலை-மயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடந்து வருகிறது. தென்னை மரங்களுக்கு மூலவைகை ஆறு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக கடமலை- மயிலை ஒன்றியத்தில் போதிய அளவில் மழை பெய்யவில்லை. இதனால் வருடத்தின் பெரும்பாலான மாதங் கள் மூலவைகை ஆறு வறண்ட நிலையிலேயே உள்ளது.