

அந்தவகையில், தாம்பரம் மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில் நாளை(வெள்ளிக்கிழமை) இணையதள முறையில் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட உள்ளது. சந்தாதாரர்கள், தொழிலாளர்கள் தங்களுடைய புகார்கள், கோரிக்கைகளை tam-grievances@epfindia.gov.in என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி பதிவு செய்யலாம். உறுப்பினர்கள், 10-ந்தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை இணையதள முறையில் பங்கேற்கலாம்.
இதேபோல தாம்பரம் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் ஓய்வூதியதாரர்களுக்கும் நாளை இணையதள முறையில் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட உள்ளது. ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய கோரிக்கைகள், குறைகள் தொடர்பாக இ-மெயில் முகவரியில் பதிவு செய்யலாம். ஓய்வூதியதாரர்களுக்கு மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.
மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர்-1 ஹிமான்சு குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.