பாரதீய ஜனதா ஆட்சியில் தலித் மக்கள் மீது தாக்குதல் நாராயணசாமி வேதனை

பாரதீய ஜனதா ஆட்சியில் தலித் மக்கள் தாக்கப்படுகின்றனர் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி வேதனை தெரிவித்தார்.
பாரதீய ஜனதா ஆட்சியில் தலித் மக்கள் மீது தாக்குதல் நாராயணசாமி வேதனை
Published on

புதுச்சேரி,

புதுவை காங்கிரஸ் கட்சியின் எம்.பி. வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் காங்கிரஸ் ஆதிதிராவிட பிரிவு நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு காங்கிரஸ் மாநில தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

ஆதிதிராவிட மக்களுக்கான திட்டங்களை காங்கிரஸ் கட்சிதான் முழுமையாக நிறைவேற்றி வருகிறது. கடந்த 2004 முதல் 2014 வரை அவை சிறப்பாக செயல்படுத்தப்பட்டன. ஆனால் இப்போது அந்த சமுதாய மக்கள் தாக்கப்படுகின்றனர்.

வடகிழக்கு மாநிலங்களில் மலைவாழ் மக்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் விவசாயம் செய்ய உரிமை கொடுத்தோம். ஆனால் இப்போதுள்ள மத்திய ஆட்சியாளர்கள் அதை பறித்துவிட்டனர். தலித் மக்களுக்கு முதல் எதிரி பிரதமர் நரேந்திர மோடிதான்.

புதுவையில் மருத்துவ படிப்புக்கு தேர்வாகும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு இலவச கல்வி கொடுக்க கோப்பு அனுப்பினோம். ஆனால் அதற்கு முட்டுக்கட்டை போட்ட கவர்னர் கிரண்பெடி விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பி கொடுமையான காரியத்தை செய்துள்ளார்.

ராகுல் பிரதமரானதும் இவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். ராகுல்காந்தி அறிவிக்கும் வேட்பாளரின் வெற்றிக்கு காங்கிரஸ் தொண்டர்கள் இரவு பகலாக உழைக்கவேண்டும். இந்த தேர்தல் தலித் மக்களுக்கான வாழ்க்கை பிரச்சினை.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார். கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் பேசியதாவது:-

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com