

திருவள்ளூர்,
திருவள்ளூர் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 18-ந்தேதி நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு எந்திரங்களை திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டில் உள்ள ஸ்ரீராம்வித்யா மந்திர் பள்ளி மற்றும் ஸ்ரீராம் கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டது.