அரியாங்குப்பம் அருகே ஓட ஓட விரட்டி வாலிபருக்கு சரமாரி வெட்டு மணல் திருட்டை தட்டிக் கேட்டதால் ஆத்திரம்

அரியாங்குப்பம் அருகே அரிக்கன்மேடு பகுதியில் மணல் திருட்டை தட்டிக் கேட்ட தகராறில் ஓடஓட விரட்டி வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
அரியாங்குப்பம் அருகே ஓட ஓட விரட்டி வாலிபருக்கு சரமாரி வெட்டு மணல் திருட்டை தட்டிக் கேட்டதால் ஆத்திரம்
Published on

அரியாங்குப்பம்,

அரியாங்குப்பத்தை அடுத்த காக்காயந்தோப்பு ராஜீவ்காந்தி வீதியைச் சேர்ந்தவர் அஜீத் என்ற அஜீத்குமார் (வயது 22), கூலி தொழிலாளி. நேற்று பகல் அஜீத்தும், அவருடைய நண்பர் வீராம்பட்டினத்தை சேர்ந்த அபிமன்னனும் ஒரு மோட்டார் சைக்கிளில் வீராம்பட்டினத்தில் இருந்து காக்காயந்தோப்புக்கு சென்று கொண்டிருந்தனர். அஜீத் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்தார்.

காக்காயந்தோப்பு அருகே சென்றபோது அவர்களை மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென வழிமறித்தது. அவர்களை பார்த்ததும் சுதாரித்துக் கொண்ட அஜீத், மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com