காட்டுயானைகள் அட்டகாசம்

காட்டுயானைகள் அட்டகாசம்
காட்டுயானைகள் அட்டகாசம்
Published on

பந்தலூர்

பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே புஞ்சைகொல்லியில் ஏராளமான பொதுக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் தங்களது தோட்டங்களில் வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து உள்ளனர். இங்கு காட்டுயானைகள் நடமாட்டம் உள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு 7 காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களின் குடியிருப்புகளை முற்றுகையிட்டன. பின்னர் யோகேஸ்வரன், மூர்த்தி உள்ளிட்ட விவசாயிகளின் வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தின. இதை அறிந்த சேரம்பாடி வனவர்கள் ஆனந்த், மாண்பன் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து காட்டுயானைகளை விரட்டினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com