மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளி தவறி விழுந்து சாவு

கோட்டூர் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளி தவறி விழுந்து இறந்தார்.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளி தவறி விழுந்து சாவு
Published on

கோட்டூர்,

கூத்தாநல்லூர் தாலுகா திருநாட்டியத்தான்குடி கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது45). தொழிலாளி. இவரது மனைவி சத்யா(40). இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்தநிலையில் கோட்டூர் அருகே சேந்தமங்கலம் சிவன்கோவில் தெருவில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. நேற்று தொட்டி மேல் ஏறி கம்பி கட்டும் பணியில் விஸ்வநாதன் ஈடுபட்டார். அப்போது திடீரென தவறி கீழே விழுந்தார்.

இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே விஸ்வநாதன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விக்கிரபாண்டியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளி தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com