ஐக்கிய நாடுகள் சபை

2-ம் உலகப்போர் நடந்து முடிந்த பிறகு உலக அமைதி, பரஸ்பர பாதுகாப்பு ஆகியவற்றை ஏற்படுத்த அனைத்து நாடுகளும் இணைந்து உருவாக்கியதே ஐ.நா. சபை ஆகும்.
ஐக்கிய நாடுகள் சபை
Published on

இது ஐக்கிய நாடுகள் சபை என்று அழைக்கப்படுகிறது. இந்த பெயரை சூட்டியவர் பிராங்ளின் ரூஸ்வெல்ட் ஆவார். இந்த சபையின் முதல் கூட்டம் கடந்த 1946-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்றது.

ஐ.நா. சபைக்கு ஒரு நாடு அதிகபட்சமாக 5 பிரதிநிதிகளை அனுப்பலாம். நியூயார்க் நகரில் செயல்பட்டு வரும் ஐ.நா. சபையானது பொதுச்சபை, பாதுகாப்பு சபை, பொருளாதார சபை, பொறுப்பாண்மை குழு, சர்வதேச நீதிமன்றம், செயலகம் ஆகிய 6 உள் அமைப்புகளை கொண்டது. இதில் சுய ஆட்சி அதிகாரம் பெறாத நாடுகளின் நலனை பாதுகாக்க பொறுப்பாண்மை குழு அமைக்கப்பட்டது. இந்த சபை ஆண்டுக்கு 2 முறை கூடுகிறது. மேலும் சபை மாநாடு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 3-வது செவ்வாய்க்கிழமை நடைபெறும். இதன் செயலரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். மேலும் உறுப்பினர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள். தற்காலிக உறுப்பினர்களின் பதவிக்காலம் 1 ஆண்டு மட்டுமே. ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றம் நெதர்லாந்தில் உள்ள திஹேக் பகுதியில் உள்ளது. இதில் 15 நீதிபதிகள் பணியாற்றுகின்றனர். இவர்களது பதவிக்காலம் 9 ஆண்டுகள்.

இந்த சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளாக சீனா, பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகியவை உள்ளன. இந்தியா உள்பட பிற நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக கோரிக்கை விடுத்து வருகின்றன. ஐ.நா. சபையின் பணி சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை கண்காணிப்பது ஆகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com