தொழிலாளி மர்மசாவுபோலீசார் விசாரணை

தொழிலாளி மர்மசாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
தொழிலாளி மர்மசாவுபோலீசார் விசாரணை
Published on

தர்மபுரி மாவட்டம் திப்பம்பட்டியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 53). மரம் ஏறும் தொழிலாளி. இவருக்கு மனைவி, மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சந்திரன் வீட்டில் இருந்து வெளியில் சென்றார். நீண்ட நேரமாகியும் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இந்த நிலையில் திப்பம்பட்டி அருகே உள்ள ஒரு மாந்தோப்பில் சந்திரன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com