ஈரோடு: தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த 2 விவசாயிகள் கைது

அந்தியூர் அருகே தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த 2 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு: தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த 2 விவசாயிகள் கைது
Published on

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஓசூர் மலை கிராமத்தைச் சேர்ந்த மாதேவன்(வயது37) விவசாயி. இவருடைய தோட்டத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக பர்கூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து அவரது தோட்டத்தில் இன்று காலை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது 7 அடி உயரத்தில் வளர்ந்து நின்ற 6 கஞ்சா செடிகளை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த போலீசார் விவசாயி மாதவனை கைது செய்தனர்.

மேலும், அவரிடம் இருந்து 12 ஆயிரம் மதிப்புள்ள அஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று, கெஞ்சமரி(வயது29) என்பவர் தோட்டத்தில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகளையும் பறிமுதல் செய்து அவரையும் கைது செய்தனர்.

பின்னர், இருவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com