பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற இந்தியாவின் ஆதரவு தேவை - பலுசிஸ்தான்

பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற இந்தியாவின் ஆதரவு தேவை என்று பலுசிஸ்தான் அரசின் முதல்-மந்திரி நெய்லா குவாட்ரி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற இந்தியாவின் ஆதரவு தேவை - பலுசிஸ்தான்
Published on

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய மாகாணம் பலுசிஸ்தான். இங்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற அமைப்பினர், மக்கள் தனிநாடு கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் நாடு கடந்த பலுசிஸ்தான் அரசின் முதல்-மந்திரியும், மூத்த பெண் அரசியல்வாதியுமான நெய்லா குவாட்ரி பாகிஸ்தானிடம் இருந்து பலுசிஸ்தானின் விடுதலைக்கு ஆதரவு திரட்ட உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக அவர் இந்தியா வந்துள்ளார்.

அவர் நேற்று முன்தினம் உத்தரகாண்டின் ஹரித்வார் நகரில் கங்கை நதிக்கரையில் பலுசிஸ்தானின் விடுதலைக்காக சிறப்பு பூஜை செய்தார். அதை தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய நெய்லா குவாட்ரி, "ஐ.நா.வில் பலுசிஸ்தானுக்கு ஆதரவாக எழுவதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கும் பா.ஜ.க. அரசுக்கும் இன்று ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அது நாளை கிடைக்காது. ஐ.நா.வில் பலுசிஸ்தானுக்காக இந்தியா நின்றால், எங்கள் நாடு சுதந்திரமாக இருக்கும்போது நாங்களும் இந்தியாவுக்கு ஆதரவாக நிற்போம்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com