பரமத்தி வேலூர் பால அய்யப்பன் கோவிலில் 108 சங்காபிஷேக விழா

சங்காபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
Published on

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் உள்ள பால ஐயப்பன் கோவிலில், பெளர்ணமி பூஜை குழு சார்பில் சுவாமி ஐயப்பனுக்கு 108 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெற்றது.

சங்காபிஷேக விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் 108 வலம்புரி சங்குகள் வைத்து புனித நீர் ஊற்றி அதில் புஷ்பங்கள் வைத்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் அக்னி குண்டம் அமைக்கப்பட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான திரவியங்களால் ஐயப்பனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

அதன்பின் 108 வலம்புரி சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரால் சுவாமி ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com