வாரம் ஒரு திருமந்திரம்

திருமந்திரம் நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
வாரம் ஒரு திருமந்திரம்
Published on

திருமூலரால் இயற்றப்பட்ட திருமந்திர நூலானது, சைவ நெறிகளுக்கு நிகராக வைத்து போற்றப்படுகிறது. இந்த நூல், 3 ஆயிரம் பாடல்களால் ஆனது. இதில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

பாடல்:-

உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் என்பவர்க்கு

உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் எம்இறை

உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை என்பவர்க்கு

உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை தானே.

விளக்கம்:-

எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவபெருமானை, உள்ளத்திலும் இருக்கிறார், உள்ளத்திற்கு வெளியேயும் இருக்கிறார் என்று உணர்ந்தவர்களுக்கு, அவ்வாறே இருக்கிறார். இறைவனான சிவபெருமான், உள்ளத்திலும் இல்லை, வெளியேயும் இல்லை என்று கருதுபவர்களுக்கு, அவன் எங்கும் இல்லை

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com