சிக்கல் சிங்கார காளியம்மன் கோவிலில் ஆடித் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஆடித் திருவிழாவில் இன்று சிங்கார காளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு படுகளம் சென்று, பின்னர் திருநடனம் மற்றும் வீதி உலா நடைபெற்றது.
சிக்கல் சிங்கார காளியம்மன் கோவிலில் ஆடித் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
Published on

நாகை அருகே சிக்கல் சிங்கார காளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா, கடந்த 1-ந்தேதி அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. நேற்று துர்க்கை அம்மன் புறப்பாடு நடந்தது.

இன்று காலை சிங்கார காளியம்மன், கோவிலில் இருந்து புறப்பட்டு படுகளம் சென்றார். பின்னர் திருநடனம் மற்றும் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வருகிற 9 -ந்தேதி (சனிக்கிழமை) இரவு ஊஞ்சல் உற்சவம் மற்றும் அம்மன் வெள்ளை உடுத்தி திருநடனத்துடன் கோவிலுக்குள் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com