

சேலம்,
சேலம் மாநகரில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறுவதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் சேலத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.