மோவூர் திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி மஹோத்சவ விழா

காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
மோவூர் திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி மஹோத்சவ விழா
Published on

திருவள்ளூர் அடுத்த மோவூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ தர்மராஜா ஆலயத்தில் அக்னி மஹோத்சவ விழா கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முதல் நாள் அம்மனுக்கு காப்பு கட்டுதலும், மறுநாள் (9-ம் தேதி) பகாசுரன் திருவிழாவும், 10-ம் தேதி திரௌபதி திருமணமும், 11-ம் தேதி சுபத்திரை திருமணமும் நடைபெற்றது. 12-ம் தேதி கரக உற்சவம், 13-ம் தேதி அர்ஜுனன் தபசு மற்றும் நாடகம் நடைபெற்றது. 14-ம் தேதி தர்மராஜா எழுந்தருளுதலும், 15-ம் தேதி அர்ஜுனன் மாடு மடக்குதலும், 16-ம் தேதி படுகளமும் நடைபெற்றது.

நேற்று மாலை 6 மணியளவில் முக்கிய நிகழ்வான அக்னி மஹோத்சவம் விமரிசையாக நடைபெற்றது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com