திருப்பதி பிரம்மோற்சவம்: பிரகாசமான சூரியபிரபை வாகனத்தில் கோவிந்தராஜ சுவாமி வீதி உலா

வாகன சேவைக்கு முன்னால் பல்வேறு கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருப்பதி பிரம்மோற்சவம்: பிரகாசமான சூரியபிரபை வாகனத்தில் கோவிந்தராஜ சுவாமி வீதி உலா
Published on

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவின் 7-ம் நாளான இன்று காலையில் சூரியபிரபை வாகன சேவை நடைபெற்றது. கண்களை கூசச் செய்யும் பிரகாசமான சூரியபிரபை வாகனத்தில் உற்சவர் கோவிந்தராஜ சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

வாகன சேவைக்கு முன்னால் கலைஞர்கள் நாட்டியம், பஜனை மற்றும் மங்கள வாத்திய இசை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

இந்நிகழ்வில் திருமலையின் இரு ஜீயர்கள், தேவஸ்தான துணை செயல் அதிகாரி சாந்தி மற்றும் நான்கு மாடவீதிகளில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பகவானை தரிசனம் செய்தனர். நாளை (9-ந்தேதி) தேரோட்டம் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com