மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்

தீர்த்தவாரிக்காக காவிரியின் இரு கரைகளிலும் எழுந்தருளிய உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்
Published on

மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சியின் முக்கிய உற்சவமான கடைமுக தீர்த்தவாரி விழா இன்று நடந்தது.

திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை உடனான மாயூரநாதசாமி கோவிலில் இருந்து சாமி புறப்பாடு நடைபெற்று காவிரி துலா கட்டத்தை வந்தடைந்தன. இதேபோல, திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அறம்வளர்த்த நாயகி உடனான ஐயாறப்பர் சாமி, தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை உடனான வதாரண்யேஸ்வரர், விசாலாட்சி உடனான காசிவிஸ்வநாதர் கோவில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் காவிரியின் இரு கரைகளிலும் எழுந்தருளினர்.

பின்னர் அங்கு உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து தென்கரையில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் அம்பலவாணதேசிக பரமாச்சாரிய சாமிகள் முன்னிலையிலும், வடக்கு கரையில் தருமபுரம் ஆதீனம் 27- வது குருமகாசந்நிதானம் மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பிரமாச்சாரிய சாமிகள் முன்னிலையிலும் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மதியம் 1.30 மணியளவில் தீர்த்தவாரி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com