

அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொன்மொழிகள் இதோ உங்கள் பார்வைக்காக...
*எது தானம் - யாரிடமும் எதையும், கேட்காமல் இருப்பதே சிறந்த தானம்.
*யார் நண்பன் - நம்மை எந்த ஒரு சிறிய பாவத்தையும் செய்யவிடாமல் தடுப்பவனே நல்ல நண்பன்.
*எது அலங்காரம் - ஒழுக்கமாக நடந்துகொள்வதே, ஒவ்வொருவரின் வாழ்விற்கும் அலங்காரம்.
*எது வாக்கியத்திற்கு அலங்காரம் - சத்தியமான வார்த்தைகள்.
*மின்னல் போல் தோன்றி மறைவது- தீயவர்களின் நட்பு.
*மனிதனுக்கு பாக்கியம் எது? - ஆரோக்கியமான வாழ்க்கை.
*யார் முழுமையானவன் - நன்மக்கள் பெற்றவன்
*கடினமான காரியம் எது? - மனதை அடக்கி வைப்பது.