குலசை தசரா திருவிழா - தயாராகும் ஆடைகள், கிரீடங்கள்

குலசேகர பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை முன்னிட்டு வேடங்களுக்கான ஆடைகள், கிரீடங்கள் தயாரிக்கும் பணியில் தையல் கலைஞர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
குலசை தசரா திருவிழா - தயாராகும் ஆடைகள், கிரீடங்கள்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இங்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.

இந்நிலையில் இந்த ஆண்டு தசரா திருவிழா வரும் 26 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதை முன்னிட்டு, காளி, முருகன், குறவன், குறத்தி, குரங்கு, கரடி, அம்மன் உள்ளிட்ட வேடங்களை அணிவதற்காக பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து வருகின்றனர்.

இந்த வேடங்களுக்கான ஆடைகள், கிரீடங்கள் தயாரிக்கும் பணிகள், திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆஞ்சநேயர், செங்காளி, கருங்காளி உள்ளிட்ட வேடங்களுக்கான கிரீடங்கள் தயாரிக்கும் பணியும் தீவிரமடைந்துள்ளது.

இரண்டு வருடங்களாக தொழில் நலிவடைந்த நிலையில், இந்தாண்டு தசரா திருவிழா தங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் என்று தையல் கலைஞர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com