

இந்த நிகழ்வை சொல்லும் வகையில் வராகமூர்த்தி சிலைகள் ஏராளமாக வடிக்கப்பட்டிருப்பதை, இந்திய தேசம் முழுவதுமே நாம் பார்க்க முடியும். அப்படி ஒரு சிலை, மத்திய பிரதேச மாநிலத்தின் சாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு பழமையான நகரம் மற்றும் தொல்பொருள் தளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. ஈரான் என்ற அந்த இடம், 5 மற்றும் 6-ம் நூற்றாண்டுகளில் குப்தர்கள் கால கோவில்கள் அமைந்த பகுதியாக இருந்துள்ளது.
இந்த சிலையானது மணல்கற்கள் கொண்டு வடிக்கப்பட்டுள்ளது. தலையை இடதுபுறமாக திரும்பியபடி வலது காலை நிலத்திலும், இடதுகாலை ஒரு உயரமான இடத்திலும் தூக்கி வைத்து, அதன்மேல் தன்னுடைய இடது கையை வைத்து கம்பீரமாக காட்சி தருகிறார், இந்த வராகப்பெருமான். இவரது வாய்ப் பகுதியில் இருக்கும் சிறிய கொம்பினை, தனது கரங்களால் தாங்கிக்கொண்டு தொங்கியபடி பூமாதேவி பெண் வடிவத்தில் காட்சியளிக்கிறார்.
இந்த சிற்பம் தற்போது, மத்திய பிரதேசம் சாகர் மாவட்டத்தில் உள்ள சாகர் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.