கற்பகப் பொன் சப்ரத்தில் முத்துமாலை அம்மன் பவனி

முத்துமாலை அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி பவனி வந்தபோது பக்தர்கள் தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
கற்பகப் பொன் சப்ரத்தில் முத்துமாலை அம்மன் பவனி
Published on

ஏரல் அடுத்துள்ள்ள சிறுத்தொண்டநல்லூரில் முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா ஆண்டுதோறும் ஆவணி 2-வது செவ்வாய்க்கிழமை நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டின் கொடை விழாவுக்கு கடந்த 19-ந் தேதி கால் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று முதல் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சிகள் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. பகல் அம்மன் சந்தனகாப்பு தரிசனம், சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. மாலையில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர். இரவு 8 மணிக்கு வில்லிசை நடந்தது. 9 மணிக்கு கயிறு சுற்றி ஆடுதல், முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு 12 மணிக்கு புஷ்ப அலங்கார தரிசனம், சிறப்பு பூஜை நடந்தது.

அதனைத் தொடர்ந்து மத்தாப்பு, வாண வேடிக்கையுடன், மேள தாளங்கள் முழங்க, கற்பகப் பொன் சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி நகர் உலா வந்து அருள்பாலித்தார். 

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேங்காய் உடைத்து, பழம் வைத்து வழிபட்டனர். இன்று புதன்கிழமை காலை அம்மன் சப்பரம் கோவிலை அடைந்து. அதைத் தொடர்ந்து அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டனர்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com