பிரதோஷம்: சதுரகிரிக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி

பிரதோஷத்தையொட்டி சதுரகிரிக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பிரதோஷம்: சதுரகிரிக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி
Published on

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வருகிற 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர். பக்தர்கள் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராதவிதமாக மழை பெய்தால் பக்தர்கள் மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com