இன்று சங்கடஹர சதுர்த்தி: விளக்கேற்றி விநாயகரை வழிபட வினைகள் தீரும்

சதுர்த்தி தினமான இன்று மாலை நேரத்தில் விநாயகரை வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும்.
இன்று சங்கடஹர சதுர்த்தி: விளக்கேற்றி விநாயகரை வழிபட வினைகள் தீரும்
Published on

முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு உகந்த விரத தினம் சதுர்த்தி ஆகும். விநாயகர் அவதரித்தது சதுர்த்தி திதியில் என்பதால் ஒவ்வெரு மாதத்திலும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் சதுர்த்தி திதிகள் அனைத்தும் விநாயகர் வழிபாட்டிற்குரிய நாட்கள்தான். இதில், தேய்பிறையில் வரும் சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்கிறோம்.

'சங்கட' என்றால் துன்பம், 'ஹர' என்றால் அழித்தல். எனவே, அனைத்து விதமான துன்பங்களையும் தீர்க்கக் கூடிய விரத தினமே சங்கடஹர சதுர்த்தி. இதனால்தான் பெரும்பாலான பக்தர்கள் வளர்பிறை சதுர்த்தியை விட, தேய்பிறை சதுர்த்தியில் விரதம் இருந்து விநாயகரை வழிபடுவது வழக்கம். சங்கடஹர சதுர்த்தி அன்று மாலையில் சந்திர உதயத்திற்கு பிறகு நடக்கும் பூஜையில் கலந்து கெண்டு, சந்திர தரிசனம் செய்த பிறகு விரதத்தை நிறைவு செய்தால், எப்படிப்பட்ட துன்பமாக இருந்தாலும் அது விநாயகர் அருளால் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.

இன்று (10.9.2025) சங்கடஹர சதுர்த்தி நாளாகும். இன்று மாலை 6:45 மணிக்கு தான் சங்கடஹர சதுர்த்தி திதி ஆரம்பிக்கிறது. இந்த திதியானது நாளை வியாழக்கிழமை மாலை 4,25 மணி வரை இருக்கிறது. மாலை நேர வழிபாடு தான் சங்கடஹர சதுர்த்தி திதிக்கு உகந்தது என்பதால், இன்று மாலை நேரத்தில் விநாயகரை வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும். நாளை காலையிலும் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.

இன்று மாலையில் விநாயகர் கோவிலுக்கு சென்று 2 மண் அகல் விளக்குகளில் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி கிழக்கு நோக்கி ஏற்றி வைத்து வழிபடலாம். விநாயகரை வழிபட்டபின், கோவிலில் அமர்ந்து பிரார்த்தனைகள் மற்றும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள சங்கடங்களை பிள்ளையாரிடம் சொல்லி, இந்த சங்கடங்களை எல்லாம் தீர்த்து வைக்கும்படி மனமுருகி பிரார்த்தனை செய்ய வேண்டும்.

சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது சிறப்பானது. அருகம்புல் படைத்து வழிபட்டால் நேய்கள், காரியத் தடைகள், கடன் தெல்லை உள்ளிட்ட அனைத்து விதமான பிரச்சனைகளும் நீங்கி விடும் என்பது நம்பிக்கை. விநாயகருக்கு விருப்பமான மேதகம் படைத்தும், சிதறு தேங்காய் உடைத்தும் விநாயகரை வழிபடலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com