நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
Published on

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் தினமும் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்து வருகிறது.

இந்நிலையில் ஆவணி மாத பிறப்பு மற்றும் ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி ஆஞ்சநேயருக்கு இன்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியர்கள் குடம், குடமாக பால் ஊற்றி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில் நாமக்கல் மட்டும் இன்றி பிற மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதையொட்டி கோவில் முன்பு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com