திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் மே மாத சிறப்பு உற்சவங்கள்

திருச்சானூர் வசந்தோற்சவத்தின் ஒரு பகுதியாக 12-ந்தேதி தங்கத் தேரோட்டம் நடைபெறுகிறது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் மே மாத சிறப்பு உற்சவங்கள்
Published on

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்குட்பட்ட திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் மே மாதம் நடக்கும் சிறப்பு உற்சவங்கள் குறித்து தேவஸ்தானம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

மே மாதம் 2, 9, 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மாலை 6 மணிக்கு திருச்சி உற்சவம், 6-ந்தேதி காலை 6 மணிக்கு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம், 10-ந்தேதி பத்மாவதி தாயாருக்கான வசந்தோற்சவ அங்குரார்ப்பணம், 11 முதல் 13-ந்தேதி வரை வசந்தோற்சவம், 12-ந்தேதி வசந்தோற்சவத்தின் ஒரு பகுதியாக காலை 9.45 மணிக்கு தாயார் தங்கத்தேரில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

18-ந்தேதி உத்திராட நட்சத்திரத்தையொட்டி மாலை 6.45 மணிக்கு தாயார் கஜ வாகனத்தில் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அதேபோல் பலராமகிருஷ்ணசாமி கோவிலில் 27-ந் தேதி ரோகிணி நட்சத்திரத்தையொட்டி மாலை 6 மணிக்கு கிருஷ்ணருக்கு திருச்சி உற்சவம் நடக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com