திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம்

விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி, தீர்த்த குளத்தில் 5 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம்
Published on

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. ஆன்மிக சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முக்கிய நிகழ்வாக 3-ம் தேதி திருக்கால்யாண உற்சவமும், 8-ம் தேதி திருத்தேரோட்டமும் நடந்தது. நேற்று இரவு தெப்போற்சவம் நடந்தது. அதையொட்டி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளினார். பின்னர் தீபாராதனையுடன் தெப்பம் புறப்பட்டது. கோவில் தீர்த்த குளத்தில் 5 முறை தெப்பம் வலம் வந்தது. தெப்பக்குளத்தின் கரையில் திரண்டிருந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com