ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்த திருப்பதி தேவஸ்தான அதிகாரி

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கார்த்திகை மாத ஏகாதசி அன்று ரெங்கநாதர் கோவிலுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிப்பது வழக்கம்.
Published on

2008-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள சில புராதன மற்றும் முக்கியமான கோவில்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் பட்டு வஸ்திரங்களை சமாப்பித்து வருகிறது. அதன்படி திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு நேற்று பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.

திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவ், மூலவர் ரெங்கநாதருக்கு பட்டு வஸ்திரத்தைச் சமர்ப்பித்து சாமி தரிசனம் செய்தார், கோவில் வளாகத்தில் அமைந்துள்ள பிற துணைக் கோவில்களிலும் சாமி தரிசனம் செய்தார்.

இந்நிகழ்வில் திருமலை திருப்பதி தேவஸ்தான துணை செயல் அதிகாரி லோகநாதன் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள், ஸ்ரீரங்கம் கோவில் அதிகாரிகள் பங்கேற்றனர்.

வழக்கமாக ஸ்ரீரங்கம் கோவில் அதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் ஆனிவார ஆஸ்தானத்தின்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிப்பர். திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கார்த்திகை மாத ஏகாதசி அன்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிப்பது வழக்கம். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com