வசந்தோற்சவம் 2-வது நாள்:தங்கத்தேரில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி பவனி

நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை தங்கத்தேரோட்டம் நடந்தது.
வசந்தோற்சவம் 2-வது நாள்:தங்கத்தேரில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி பவனி
Published on

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் காலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை தங்கத்தேரோட்டம் நடந்தது.

அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

தங்கத்தேரோட்டத்தில் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் ஜோதுல நேரு, துணை அதிகாரி லோகநாதம், பறக்கும்படை அதிகாரி சுரேந்திரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com