சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டி; இந்திய வீரர் பிரணோய் தோல்வி

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்திய வீரர் பிரணோய் தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்து உள்ளார்.
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டி; இந்திய வீரர் பிரணோய் தோல்வி
Published on

பேசல்,

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் இந்தியாவின் எச்.எஸ். பிரணோய் மற்றும் இந்தோனேசியாவின் ஜோனாதன் கிறிஸ்டி ஆகியோர் விளையாடினர்.

இந்த போட்டியில், தொடக்கத்திலேயே ஜோனாதன் அதிரடி ஆட்டம் வழியே புள்ளிகளை சேர்க்க தொடங்கினார். எனினும், ஒரு கட்டத்தில் 7-7 என்ற கணக்கில் இருவரும் சமநிலையில் இருந்தனர். இதன்பின்பு மளமளவென்று புள்ளிகளை எடுத்த ஜோனாதன் முதல் செட்டை 12-21 என்ற புள்ளி கணக்கில் வெற்றி கொண்டார்.

இதனை தொடர்ந்து, நடந்த 2வது செட்டுக்கான போட்டியிலும், ஜோனாதனின் அதிரடி தொடர்ந்தது. எனினும், 2-2, 4-4, 5-5 என புள்ளி கணக்கு நகர்ந்தது. இதன்பின்பு, பிரணோய் தவறாக கணித்து ஆடியது ஜோனாதனுக்கு வசதியாக அமைந்து விட்டது.

அடுத்தடுத்து புள்ளிகளை கைப்பற்றிய அவர், 9-13 என முன்னிலை பெற்றார். இதனை பிரணோய் போராடி 13-13 என்ற நிலைக்கு கொண்டு சென்றார். எனினும், தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி முன்னேறிய ஜோனாதன் இறுதியில், 18-21 என்ற கணக்கில் 2வது செட்டையும் கைப்பற்றினார். இதனால், 12-21, 18-21 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தினை தட்டி சென்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com