

பேசல்,
சுவிஸ் ஓபன் பேட்மிண்டனில் இன்று நடந்த இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் தாய்லாந்து நாட்டின் பூசணன் ஓங்பாம்ரங்பான் ஆகியோர் விளையாடினர்.
ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்றவரான சிந்து, முதல் செட்டில் தொடக்கத்தில் 5-7 என்ற புள்ளி கணக்கில் சிந்து பின்தங்கி இருந்தபோதும், பின்பு அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து புள்ளிகளை வெற்றி கொண்டார். இறுதியில், முதல் செட்டை 21-16 என்ற கணக்கில் சிந்து கைப்பற்றினார்.
இதன்பின் 2வது செட்டையும் அதிரடியாகவே சிந்து தொடங்கினார். ஒரு கட்டத்தில் 5-0 மற்றும் 8-1 என்ற கணக்கில் சிந்து முன்னிலை பெற்றார். பின்பு தொடர்ந்து புள்ளிகளை கைப்பற்றி இறுதியில் 21-8 என்ற செட் கணக்கில் 2வது செட்டையும் தன்வசப்படுத்தினார்.
இதனால், 21-16, 21-8 என்ற நேர் செட் கணக்கில் பூசணனை வீழ்த்தி சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மற்றொரு இறுதி போட்டியில் ஆடவர் பிரிவில் இந்தியாவின் பிரணோய் மற்றும் இந்தோனேசியாவின் ஜோனாதன் கிறிஸ்டி விளையாடி வருகின்றனர்.