ரஷியாவின் தாக்குதலில் இருந்து உயிர்பிழைத்த பூனைக்குட்டி! வைரல் வீடியோ
அந்த செல்லப்பிராணியின் உரிமையாளர் ரஷிய தாக்குதலில் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கீவ்,
உக்ரைன் மீது ரஷியா 24-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல நகரங்களையும் ரஷிய படைகள் வெடிகுண்டு தாக்குதல் தொடுத்து வருகின்றனர். மரியோபோல் நகரில் வான்வழித் தாக்குதலால் பாதிக்கப்பட்ட திரையரங்கின் இடிபாடுகளில் இருந்து இதுவரை 130 பேர் மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைனின் மனித உரிமைகள் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதர்கிடையே, உக்ரைனில் ரஷிய தாக்குதலால் சேதமடைந்த கட்டிடத்தின் உள்ளே ஒரு பூனைக்குட்டி சிக்கி கொண்டது. அதனை மீட்புக்குழுவினர் போராடி மிட்ட் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
கார்கிவ் நகரில் ஒரு சேதமடைந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு இடையே பூனைக்குட்டி மாட்டிகொண்டு
தவித்து கொண்டிருந்தது. அப்பகுதியில் மீட்புபணியில் ஈடுபட்டிருந்த உக்ரைன் வீரர்கள் இந்த பூனைக்குட்டியை பத்திரமாக மீட்டனர்.
ஆனால், அந்த செல்லப்பிராணியின் உரிமையாளர் ரஷிய தாக்குதலில் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story