காங். மாவட்ட தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்: தோட்ட தொழிலாளியிடம் விசாரணை


காங். மாவட்ட தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்: தோட்ட தொழிலாளியிடம் விசாரணை
x

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் தோட்ட தொழிலாளியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை,

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.ஜெயக்குமார். இவர் கடந்த 2ம் தேதி இரவு 7.45 மணியளவில் கரைசுத்து புதூரில் உள்ள தனது வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து ஜெயக்குமாரின் மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த உவரி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே, மாயமான ஜெயக்குமார் தனது வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் நேற்று காலை எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஜெயக்குமாரின் கை, கால்கள் பலகையில் மின் ஒயரால் கட்டப்பட்டிருந்தது. அவரை யாரேனும் கை-கால்களை கட்டி கொலை செய்து இங்கு கொண்டு வந்து எரித்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்துகொண்டாரா? அரசியல் கொலையா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் எரிந்த நிலையில் தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அவர் வீட்டு தோட்ட தொழிலாளியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தோட்ட தொழிலாளியான கணேசனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story