14 தொகுதிகளில் வியாழக்கிழமை முதல்கட்ட வாக்குப்பதிவு கர்நாடகத்தில் ஒரே நாளில் மோடி-ராகுல் காந்தி போட்டி பிரசாரம்
கர்நாடகத்தில் முதல்கட்டமாக 14 தொகுதி களுக்கு வருகிற வியாழக்கிழமை தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் போட்டி பிரசாரத்தில் ஈடுபட்டனர். தலைவர்கள் முற்றுகையால் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.