திருப்பதி கோவிலில் அங்கப்பிரதட்சண டோக்கன் வழங்கும் நடைமுறையில் மாற்றம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அங்கப்பிரதட்சண டோக்கன் வழங்கும் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி கோவிலில் அங்கப்பிரதட்சண டோக்கன் வழங்கும் நடைமுறையில் மாற்றம்
Published on

திருமலை,

திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை நேரத்தில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்வது நடைமுறையில் இருந்து வருகிறது. அதற்கான டோக்கன் வழங்கும் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை இருந்த நடைமுறைக்குப் பதிலாக லக்கி டிப் (குலுக்கல்) என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கப்பிரதட்சண டோக்கன்கள் 3 மாதங்களுக்கு முன்பே ஆன்லைன் லக்கி டிப் முறையால் வெளியிடப்படும். தற்போது டிசம்பர் மாத அங்கப்பிரதட்சண டோக்கன்களுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் 20-ந்தேதி வரை லக்கி டிப் பதிவு செய்ய வேண்டும். லக்கி டிப் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கே டோக்கன்கள் ஒதுக்கப்படும். வெள்ளிக்கிழமையை தவிர தினமும் 750 டோக்கன்களும், சனிக்கிழமையில் 500 டோக்கன்களும் வழங்கப்படும்.

பக்தர்கள் மீண்டும் இந்தச் சேவையைப் பெறுவதற்கான கால இடைவெளி 90 நாட்களுக்கு பதிலாக 180 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் இந்த மாற்றத்தைக் கவனத்தில் கொண்டு அங்கப்பிரதட்சண டோக்கன்களுக்கு பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com