மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.12.81 லட்சம் காணிக்கை மூலம் வசூல்

திருவிழா கால உண்டியல் வருமானமாக 36 நாட்களுக்கு ரூ.45,56,939 ரொக்கம் வசூலாகியுள்ளது.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.12.81 லட்சம் காணிக்கை மூலம் வசூல்
Published on

மணவாளக்குறிச்சி,

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 9 நிரந்தர உண்டியல், 6 குடங்கள், தற்காலிக உண்டியல் மற்றும் திறந்த வார்ப்பு ஆகியன கடந்த 11-ந்தேதிக்கு பிறகு இன்று கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், உதவி ஆணையர் தங்கம், அறங்காவலர்குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் அறங்காவலர்குழு உறுப்பினர் ராஜேஷ், பத்மனாபபுரம் தேவஸ்வம் தொகுதி கண்காணிப்பாளர் சண்முகம் பிள்ளை, ஆய்வாளர் செல்வி, கோயில் ஸ்ரீகாரியம் செந்தில் குமார் மற்றும் கோவில் ஊழியர்கள், சுயஉதவிக்குழு பெண்கள், பொதுமக்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டன.

இதில் ரூ.12,80,946 ரொக்கமாகவும், 400 மி.கி. தங்கம், 15.3 கிராம் வெள்ளி ஆகியன கிடைக்கப்பெற்றன. இதன் மூலம் திருவிழா கால உண்டியல் வருமானமாக கடந்த பிப்ரவரி மாதம் 7-ந்தேதி முதல் மார்ச் 14-ந்தேதி வரையான 36 நாட்களுக்கு ரூ.45,56,939 ரொக்கமாக வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com