ஒரே பதிவெண்ணில் இயங்கிய தமிழக சுற்றுலா பஸ்கள் பறிமுதல்

கோலார் தங்கவயலில் ஒரே பதிவெண்ணில் இயங்கிய தமிழக சுற்றுலா பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
ஒரே பதிவெண்ணில் இயங்கிய தமிழக சுற்றுலா பஸ்கள் பறிமுதல்
Published on

கோலார் தங்கவயல்:

சேலம் மாவட்டம் சங்ககிரியில் இருந்து 2 சுற்றுலா பஸ்களில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சுற்றுலாவாக நேற்று கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் கோலார்தங்கவயல் பகுதிக்கு வந்துள்ளனர். அந்த 2 பஸ்களின் பதிவெண்ணும் ஒரே எண் ஆக இருந்தது. அதாவது இரு பஸ்களும் டி.என்.52 ஏ 9369 என்ற பதிவெண்ணுடன் இயங்கியது.

இதுபற்றி கோலார் தங்கவயல் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றது. உடனே வட்டார போக்குவரத்து துறையினர், அந்த 2 பஸ்களையும் கோலார் தங்கவயல் பெமல் நகர் அருகே தடுத்து நிறுத்தினர். பின்னர் டிரைவர்களிடம் பஸ்களின் ஆவணங்களை வாங்கி பரிசோதித்து பார்த்தனர்.

அப்போது 2 பஸ்களுக்கும் ஒரே வாகன பதிவெண்ணை பயன்படுத்தியதும், இதன் மூலம் வரி ஏய்ப்பு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த 2 பஸ்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து, கோலார் தங்கவயல் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com