தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா உறுப்பினர் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு

காலியாக உள்ள 3 இடங்களில் ஒரு இடத்திற்கு மட்டும் அறிவிப்பு வேளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.
தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா உறுப்பினர் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் மூன்று ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ள நிலையில், ஒரு இடத்தில் செப்டம்பர் 13-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மூன்று ராஜ்யசபா இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கும் நிலையில், ஒரு இடத்துக்கான ராஜ்யசபா தேர்தல் செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிமுகவின் முகமது ஜானின் மறைவை தொடர்ந்து அந்த இடத்துக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  • வேட்பு மனு துவக்கம்- ஆகஸ்ட் 24
  • வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் -ஆகஸ்ட் 31
  • வேட்பு மனு பரிசீலனை - செப்டம்பர் 1
  • திரும்பப் பெற கடைசி நாள் செப்டம்பர் 3
  • தேர்தல் நடைபெறும் நாள்; செப்டம்பர் 13 (காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை)

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com